Monday, 7 November 2016

தர்மத்திற்கு அதிபதியான தர்மதேவன்

தர்மத்திற்கு அதிபதியான தர்மதேவன்

எமதர்மராஜன் விருஷபம் என்ற தரும ரூபத்தோடு தபசு செய்து இம்மலைக்கு விருஷபாத்ரி எனப் பெயரிடுமாறு பகவானை வேண்ட அவ்வண்ணமேயாயிற்றென்பர். தர்மத்திற்கு அதிபதியான தர்மதேவன் இங்கு ஸ்ரீமந் நாராயணனைக் குறித்து தவமிருந்து சுந்தரராஜனைத் தரிசித்து அதே திருக்கோலத்தை யாவருக்கும் காண்பிக்க இங்கேயே எழுந்தருளுமாறு வேண்டி நிற்க, அவ்வண்ணமே எழுந்தருளியதாகவும், உடனே தர்ம தேவன் விஷ்வகர்மாவை அழைத்து விமானம், கோபுரம், கோட்டை கொத்தளத்துடன் எம்பெருமானுக்கு கோவில் எழுப்புமாறு கேட்க, சந்திரனைப் போன்ற அழகு வாய்ந்த சோமச்சந்த விமானத்துடன் விஸ்வகர்மா இக்கோவிலை உருவாக்கினான் என்பது வரலாறு

மலயத்வஜ பாண்டியன்

dir="ltr" style="text-align: left;" trbidi="on">   மலயத்வஜ பாண்டியன்

சந்திர வம்சத்தில் உதித்த புருரவசு என்னும் மன்னன் தென்தேசத்தில்
மணலூரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான். அவனுக்கு நான்கு
புத்திரர்கள். மூத்தவனான இந்திரத்யுமனன் இத்தலத்தில் மகா விஷ்ணுவைக்
குறித்து தவமிருந்து பராக்கிரமசாலியான ஒரு புத்திரனை பெற்றெடுத்தான்.
அவனுக்கு மலயத்வஜன் என்று பெயரிட்டான். இந்த மலயத்வஜ பாண்டியன்
பாண்டிய நாட்டை ஆண்டு வரும் போது தனது புஷ்ப விமானத்தில் இம்மலை
மீது பறந்துவர விமானம் பறக்க முடியாது தரையிறங்கியது. அங்கிருந்த
முனிவர்கள் மூலம் இப்பெருமானின் கோபுரத்தை தாண்டி எந்த விமானமும்
பறக்க முடியாதென்ற உண்மையைக் கேள்விப்பட்டு, இப்பெருமான் பக்கலில்
ஈடற்ற பக்தி கொண்டு இக்கோவிலுக்கு எண்ணற்ற கைங்கரியங்களை செய்து
மிகச்சிறந்த வைணவ மன்னனாகத் திகழ்ந்தான். 

மண்டுக முனிவர்

மண்டுக முனிவர்
சுதபா என்னும் முனிவர் திருமாலிருஞ்சோலையில் தவமியற்றினார்.
ஒரு நாள் அவர் நீராடிக் கொண்டிருக்கும்போது துர்வாசரும் அவரது
சீடர்களும் அங்கு வர இவர்களைக் கவனியாது சுதபா முனிவர் வெகுநேரம்
நீரில் மூழ்கியிருந்ததால் துர்வாசருக்கு சினம் வந்துவிட்டது. என்னை மதியாது
தண்ணீருக்குள்ளேயே கிடந்ததால் நீ தண்ணீரில் வாழும் தவளையாகக் கடவது
(மண்டுகமாகக் கடவது) என்று துர்வாசர் சபித்தார். தனது நிலையுணர்ந்த
சுதபன் முனிவர் துர்வாசரிடம் மன்னிப்பு வேண்டினார். மனங்கனிந்ததுர்வாசர்
நீ  நாராயணன் நித்ய வாசம் செய்யும் வராக பர்வதம் சென்று அங்குள்ள
தர்மாத்திரி என்று அழைக்கப்படும் பர்வதத்தில் சென்று தவம் புரிக, எம்பெருமான் காட்சிகொடுத்ததும் உனக்கிட்ட சாபம் அகலும்
என்றார். அதற்கு சுதப முனிவர் நான் திருமாலிருஞ்சோலை நின்ற
சுந்தரராஜனையே நித்ய தரிசனம் செய்பவன். இப்பெருமானையே நான்
அங்கும் சென்று வழிபட வேண்டுமென நினைக்க, அவ்விதமே ஆகும் என்றார்
துர்வாசர். இவ்வாறு திருமாலிருஞ்சோலை சுந்தரராஜப் பெருமாள்
வராஹபர்வதத்தில் உள்ள தர்மாத்ரி என்னும் அழகிய பர்வதத்திற்கு
எழுந்தருளினார். இந்த அழகர் தான் இன்றைய காட்டழகர் திருக்கோவிலாகும்
(இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்தல வரலாற்றில் விரிவாகக் காணலாம்.)

திருமாலிருஞ்சோலை அழகர் திருமலை

பாரத தேசத்தில் எம்பிரான்
அர்ச்சை வடிவத்தில் எழுந்தருளியுள்ள திவ்யதேசங்கள் மிகப்பல.அவற்றுள் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்களால்மங்களாசாசனம்(பாடல் பெற்ற) பெற்ற திருப்பதிகள் 108. அவற்றுள் பாண்டியநாட்டுத் தலங்களில் ஒன்றுதான் திருமாலிருஞ்சோலை.
அழகர் என்ற பெயர் கொண்ட திருமால் கோயில் கொண்டிருப்பதால் இது அழகர் மலை என்று சொல்லப்படுகிறது . இதற்குத் திருமாலிருஞ் சோலை , உத்யான சைலம் , சோலைமலை , மாலிருங்குன்றம் , இருங்குன்றம் , வனகிரி , விருஷ பாத்திரி அல்லது இடபகரி முதலிய பல பெயர்கள் உண்டு. 
மூலவர் :   ஸ்ரீபரமஸ்வாமி, பஞ்சாயுதங்களுடன் ஸ்ரீதேவி பூதேவி சூழ பிரயோகச்
சக்கரத்துடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். 
தாயார் :  சுந்தரவல்லி, ஸ்ரீதேவி என்ற பெயரும் உண்டு. 

உற்சவர் :
   சுந்தரராஜன், கள்ளழகர் என்னும் திருநாமம். இங்கு உற்சவர் மிகவும்.
பேரழகு வாய்ந்தவர். இந்த உற்சவர் அபரஞ்சியால் செய்யப்பட்டவர்.
இந்தியாவிலேயே இங்கும் திருவனந்தபுரத்திலும் மட்டுமே அபரஞ்சியால்
செய்யப்பட்ட உற்சவர்கள் உள்ளனர். சோலைமலைக்கரசர் என்றே திவ்ய
பிரபந்தம் இந்த உற்சவமூர்த்தியை வர்ணிக்கிறது. புராணம். “ரிஷபாதிஷர்”
என்று அழைக்கிறது. மூலவரை விட உற்சவர் பெரும் புகழ் பெற்ற
ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. 

Sunday, 6 November 2016

"விருஷ பாத்திரி மகாத்மியம்" என்ற ஸ்தல புராணம் ்

     இத்தலத்தைப் பற்றி வராக புராணம், பிரம்மாண்ட புராணம் ஆக்னேய
புராணம் போன்றன விவரித்துக் கூறுகின்றது. வராக புராணத்தில் விருஷ பாத்திரி
மகாத்மியும் என்னும் தலைப்பில் இத்தலம் பற்றி பரக்கப் பேசப்பட்டுள்ளது.
ரிஷபம் என்றால் காளை. இந்தமலையினைச் சுற்றியுள்ள மலைகள் யாவும்
பசுவினைப் போலவும் இந்த மலை மட்டுமே காளை போன்றும் தோன்றுவதால்
இதற்கு ரிஷபாத்திரி என்ற பெயர் ஏற்பட்டதென்பர்.