தர்மத்திற்கு அதிபதியான தர்மதேவன்
எமதர்மராஜன் விருஷபம் என்ற தரும ரூபத்தோடு தபசு செய்து இம்மலைக்கு விருஷபாத்ரி எனப் பெயரிடுமாறு பகவானை வேண்ட அவ்வண்ணமேயாயிற்றென்பர். தர்மத்திற்கு அதிபதியான தர்மதேவன் இங்கு ஸ்ரீமந் நாராயணனைக் குறித்து தவமிருந்து சுந்தரராஜனைத் தரிசித்து அதே திருக்கோலத்தை யாவருக்கும் காண்பிக்க இங்கேயே எழுந்தருளுமாறு வேண்டி நிற்க, அவ்வண்ணமே எழுந்தருளியதாகவும், உடனே தர்ம தேவன் விஷ்வகர்மாவை அழைத்து விமானம், கோபுரம், கோட்டை கொத்தளத்துடன் எம்பெருமானுக்கு கோவில் எழுப்புமாறு கேட்க, சந்திரனைப் போன்ற அழகு வாய்ந்த சோமச்சந்த விமானத்துடன் விஸ்வகர்மா இக்கோவிலை உருவாக்கினான் என்பது வரலாறு