dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மலயத்வஜ பாண்டியன்
சந்திர வம்சத்தில் உதித்த புருரவசு என்னும் மன்னன் தென்தேசத்தில்
மணலூரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான். அவனுக்கு நான்கு
புத்திரர்கள். மூத்தவனான இந்திரத்யுமனன் இத்தலத்தில் மகா விஷ்ணுவைக்
குறித்து தவமிருந்து பராக்கிரமசாலியான ஒரு புத்திரனை பெற்றெடுத்தான்.
அவனுக்கு மலயத்வஜன் என்று பெயரிட்டான். இந்த மலயத்வஜ பாண்டியன்
பாண்டிய நாட்டை ஆண்டு வரும் போது தனது புஷ்ப விமானத்தில் இம்மலை
மீது பறந்துவர விமானம் பறக்க முடியாது தரையிறங்கியது. அங்கிருந்த
முனிவர்கள் மூலம் இப்பெருமானின் கோபுரத்தை தாண்டி எந்த விமானமும்
பறக்க முடியாதென்ற உண்மையைக் கேள்விப்பட்டு, இப்பெருமான் பக்கலில்
ஈடற்ற பக்தி கொண்டு இக்கோவிலுக்கு எண்ணற்ற கைங்கரியங்களை செய்து
மிகச்சிறந்த வைணவ மன்னனாகத் திகழ்ந்தான்.
No comments:
Post a Comment