Monday, 7 November 2016

மண்டுக முனிவர்

மண்டுக முனிவர்
சுதபா என்னும் முனிவர் திருமாலிருஞ்சோலையில் தவமியற்றினார்.
ஒரு நாள் அவர் நீராடிக் கொண்டிருக்கும்போது துர்வாசரும் அவரது
சீடர்களும் அங்கு வர இவர்களைக் கவனியாது சுதபா முனிவர் வெகுநேரம்
நீரில் மூழ்கியிருந்ததால் துர்வாசருக்கு சினம் வந்துவிட்டது. என்னை மதியாது
தண்ணீருக்குள்ளேயே கிடந்ததால் நீ தண்ணீரில் வாழும் தவளையாகக் கடவது
(மண்டுகமாகக் கடவது) என்று துர்வாசர் சபித்தார். தனது நிலையுணர்ந்த
சுதபன் முனிவர் துர்வாசரிடம் மன்னிப்பு வேண்டினார். மனங்கனிந்ததுர்வாசர்
நீ  நாராயணன் நித்ய வாசம் செய்யும் வராக பர்வதம் சென்று அங்குள்ள
தர்மாத்திரி என்று அழைக்கப்படும் பர்வதத்தில் சென்று தவம் புரிக, எம்பெருமான் காட்சிகொடுத்ததும் உனக்கிட்ட சாபம் அகலும்
என்றார். அதற்கு சுதப முனிவர் நான் திருமாலிருஞ்சோலை நின்ற
சுந்தரராஜனையே நித்ய தரிசனம் செய்பவன். இப்பெருமானையே நான்
அங்கும் சென்று வழிபட வேண்டுமென நினைக்க, அவ்விதமே ஆகும் என்றார்
துர்வாசர். இவ்வாறு திருமாலிருஞ்சோலை சுந்தரராஜப் பெருமாள்
வராஹபர்வதத்தில் உள்ள தர்மாத்ரி என்னும் அழகிய பர்வதத்திற்கு
எழுந்தருளினார். இந்த அழகர் தான் இன்றைய காட்டழகர் திருக்கோவிலாகும்
(இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்தல வரலாற்றில் விரிவாகக் காணலாம்.)

No comments:

Post a Comment